நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காரைக்கால் திண்ம கழிவகற்றல் மையத்தில் திண்ம கழிவுகள் சேகரிக்கப்பட்ட இடத்தில் இன்று இரவு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இந்நிலையில் குறித்த பகுதியில் மிகவேகமான தீபரவியதை தொடர்ந்து அங்கு குழப்பமான நிலை உருவாகியது.
இந்நிலையில் குறித்த தீப்பரவலை அடுத்து விரைந்து செயற்பட்ட ஊழியர்கள் யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் யாழ் மாநாகர சபையின் தீயணைப்பு வாகனம் திருத்த வேலைக்கு உட்பட்டிருப்பதால் சாதாரண தண்ணீர் பீச்சியடிக்கும் வவுசர் வாகனமே தீயணைப்பு படையினரால் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த வவுசர் வாகனத்தினல் தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன .
அதனை தொடர்ந்து வலி.வடக்கு பிரதேச சபை மற்றும் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் வவுசர் வாகனங்களும் வரவழைக்கப்பட்டது.
இந்நிலையிலும் தற்போது வரை குறித்த இடத்தில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
குறித்த திண்மக் கழிவகற்றல் பகுதியில் சேகரித்து வைக்கபட்ட மருத்துவ கழிவுகள் பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் உடைகள் உட்பட்ட கழிவுப் பொருட்கள் இருந்த இடத்திலேயே தீவிபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
