இலங்கை நீதியற்ற அராஜக நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது! – முன்னாள் அமைச்சர்

அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜுலை 9ஆம் திகதி ஏற்றுக்கொண்டவாறு செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 9ஆம் திகதி இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம், உடனடியாக புதிய ஜனாதிபதியை நியமிக்க வேண்டும், பின்னர் ஒப்புக்கொண்டபடி புதிய பிரதமரை நியமிக்க வேண்டும்.

அதனை ஒத்திவைப்பதன் மூலம் தற்போதைய நிலைமை மேலும் மோசமடையலாம்.

இலங்கை “நீதியற்ற அராஜக நாடாக” மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.- என அவர் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *