
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு பழமொழி உண்டு. எமது நாட்டில் சமையல் எரிவாயு,மண்ணெண்ணைத் தட்டுப்பாடு காரணமாக புல் அடுப்பு மூட்டவும் ஒரு ஆயுதமாகி விட்டது.
விறகு அடுப்பில் நெருப்பை உண்டாக்க பன்னாடையைப் பாவித்து வருபவர்களும் உண்டு.
தென்னை மரங்கள் இல்லாமல் உள்ளவர்கள் பன்னாடைக்குப் பதிலாக புற்களை வெட்டிக் காய வைத்து அதனை அடுப்பினுள் விறகுடன் கலந்து நெருப்பை உண்டாக்கிச் சமையலைச் செய்து வருகின்றனர்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழியைப் போல சமையலுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு புதுமொழி தற்போது பிரபலமாகி வருகின்றது.
பிறசெய்திகள்