ஜனாதிபதியாக சஜித்தும், பிரதமராக அனுரவும் நியமிக்கப்பட வேண்டும்!

சர்வகட்சி அரசாங்கத்தில் புதிய ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவும், பிரதமராக அனுர குமார திஸநாயக்கவும் நியமிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கூட்டம் கல்முனையில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாம் அடையாளம் கண்ட வகையில் சஜித், அனுரகுமாரஆகிய இருவரும் இந்நாட்டை தலைமை ஏற்று நடத்துவதற்கு மிக மிக பொருத்தமானவர்கள் என்பதோடு சஜித் ஜனாதிபதியாகவும், அனுர பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று நாம் முன்மொழிகின்றோம். இதேவேளை ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலகி வழிவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், வடகிழக்கு மக்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்ற குறுகிய சுய இலாப தலைமைகளை விரட்டி அடிக்க வேண்டும் என்பதோடு விக்னேஸ்வரனும் ஒன்றுதான், சம்பந்தரும் ஒன்றுதான். எமது மக்கள் புதிய தலைமையின் கீழ் பயணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஊடகத்துறையை அடக்குமுறை வேண்டாம், தற்போதைய ஜனாதிபதியை ஓட ஓட விரட்டியவர்கள் ஊடகத்துறையினர் மக்களை ஊடகத்துறை தான் வழிநடத்தியது. ஆகவே, ஊடகத்துறையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

நீங்கள் உடனடியாக பதவி விலகவேண்டும். மக்கள் போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நீதி நியாயங்கள் கிடைக்க வேண்டும்.

மிலேட்சத்தனமாக பெண் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்களை இப்போராட்டத்தில் தாக்கும் போது இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருந்தது.

இதற்கான முழுப்பொறுப்பையும் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பேற்க வேண்டும். எனவே ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு விலகி வீடு செல்வதன் ஊடாக உங்களுக்குரிய கௌரவத்தை பாதுகாத்து கொள்ள முடியும் என தெரிவிக்க விரும்புகின்றோம்.- என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *