தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் கோமகன் வேண்டுகோள்!

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் கோமகன் வேண்டுகோள்

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் தெரிவித்திருந்தார்.

அவர் இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியல் சந்திப்பின் போதே இவ்வாறு
தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ;

தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினை தற்போது சிங்கள மக்கள் உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறோம், இந்த இனப்படுகொலையினை புரிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்து இனப்படுகொலையின் விசாரணைக்கு அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த அரசியல் கைதிகளுக்கான நீதி வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் செயற்பாட்டு அமையத்தில் இடம்பெற்ற பரிந்துரைகளுக்கு அமைவாக கோரிக்கைகளை முன்வைக்கின்றோம் ,அந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து இதற்குரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு கூறிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும்.

பொருளாதாரம் நலிவடைந்திருக்கும் இத சூழ்நிலையிலும் நில ஆக்கிரமிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன, இதற்கும் சர்வதேசசமூகம் தீர்வினை பெற்றுத்தர வேண்டும்.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் சம்பந்தப்படடவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க கூடாது.இவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி எமக்கு நீதியினை பெற்றுத்தர வேண்டும்.என பாதிக்கப்பட்டவர்கள் சமூகம் கோரி நிற்கின்றோம்.என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *