
கோத்தாபய ராஜபக்ச சற்றுமுன் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார் என மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி ஏர்லைன்ஸ் விமானம் (SV788) மூலம் அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிவிலக வேண்டும் எனக் கோரி கடந்த 9ஆம் திகதி மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை கைப்பற்றினர்.
இந்த நிலையில் இலங்கையிலிருந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மாலத்தீவுக்கு நேற்று அதிகாலை தப்பியோடியிருந்தார்.
நேற்று மாலை சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானத்தில் ஏற்ற மறுப்பு தெரிவித்ததையடுத்து சிங்கப்பூர் செல்வதற்கு தனி விமானம் ஒன்றைக் கோரினார் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் (SV788) கோத்தாபய மாலைதீவுக்குப் புறப்பட்டு சென்றுள்ளார் என மாலத்தீவு ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.