இராணுவ துப்பாக்கி அபகாிப்பு; விசாரணை சிஐடிக்கு மாற்றம்!

பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது இராணுவ சிப்பாய் ஒருவரிடமிருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் 60 ரவைகள் அடங்கிய 2 ரவை கெப்கள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களின் தாக்குதலால், இராணுவ வீரர் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், சம்பவத்தின் போது மொத்த 42 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *