
கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்குள் சிறிய கஞ்சா பொதியுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா மீரிகமை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையின் நீச்சல் தடாகத்திற்கு அருகில் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துக்கொண்ட இளைஞனை பரிசோதித்த போது கஞ்சா பொதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.