தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொலிஸ் அறிவுறுத்தல்!

இந்த வார இறுதியுடன் கூடிய நீண்ட விடுமுறைக் காலத்தின்போது மாகாணங்களைக் கடந்து பயணம் செய்யவோ, சுற்றுலா, யாத்திரை போன்றவற்றில் ஈடுபடவோ வேண்டாம் என பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாத் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அக்டோபர்; 21 வரையான காலப்பகுதியில் அத்தியாவசிய தேவை தவிர மாகாண எல்லைகளைக் கடந்து பயணிக்கும் வாகனங்களை அடையாளம் காண பொலிஸ் புலனாய்வு பிரிவினரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன், கடற்கரைகள், சுற்றுலாளத் தளங்கள், மத வழிபாட்டிடங்கள் போன்றவற்றில் விதிகளை மீற அதிகளவில் ஒன்றுகூடுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, கொரோனாக் கட்டுப்பாட்டு விதிகளைக் கண்டிப்பாக அமுல்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *