போரில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக இரத்ததான முகாம்!

<!–

போரில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக இரத்ததான முகாம்! – Athavan News

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவர்களின் நினைவாக கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவ அணியினரின் ஒழுங்குபடுத்தலில்  குருதிக்கொடை முகாம் இடம்பெற்றது.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இந்த இரத்ததான முகாம் 8 வது வருடமாக  இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி எஸ். கருணதீபா, வைத்தியர்கள், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் கணக்காளர் நவீன், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *