எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை கூட்டிணைந்த அறிக்கை ஒன்றை அதிபர், ஆசிரியர் சங்கங்கள் இணைந்து முன்வைக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தில் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சில குழுக்கள் தங்களை மிரட்டுவதாகவும் அவ்வாறு மிரட்டுவதன் ஊடாக பிரச்சினையை தீர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


