அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க கோரி தேசிய ரீதியாக ஆசிரியர் சங்கங்கள் மேற்கொண்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது என கிண்ணியா வலய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதியன்று, 200 க்கும் குறைந்த பாடசாலைகளை மீளத் திறப்பது என்ற கல்வி அமைச்சின் தீர்மானம் தொடர்பாக, கிண்ணியா
வலய அதிபர்கள் சங்கம் இன்று தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது.
கிண்ணியா அல்ஹிரா மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்த விஷேட கூட்டத்திலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டாதாக சங்கத் தலைவர் எம். எம். எம். முசம்மில் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகம் அளிப்பதில்லை எனவும் கல்வித் திணைக்களங்களால் கோரப்படுகின்றன.
இக் கோரிக்கைகளுக்கு பதில் அளிப்பதில்லை இல்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுவேண்டி கீரிமலையில் கவனயீர்ப்பு!
முகமாலையில் இனந்தெரியாத குழுவினரால் சரமாரியாக தாக்கப்பட்ட நபர்!
அடுத்த இரு வாரங்களில் அனைத்து வகை அரிசிகளுக்கும் விலை அதிகரிப்பு!
கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொல்லாதே! துணுக்காய் பிரதேச விவசாயிகளும் போராட்டம்






