மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் சடலமாக இன்று மீட்கப்பட்டடுள்ளது.
இதுதொடர்பில், சந்தேகத்தில் உயிரிழந்தவரின் நண்பன் ஒருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
மரப்பாலம் முள்ளிச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய கிருஸ்ணபிள்ளை நேசராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரும் அவருடைய நண்பனும் நேற்று இரவு வீட்டிற்கு அருகிலுள்ள தோட்டம் ஒன்றில் உள்ள வாடியில் மது அருந்தியுள்ளனர்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நண்பனை தாக்கியதாகவும், அதனையடுத்து தான் அங்கிருந்து தப்பி ஓடி காட்டில் ஒளிந்திருந்ததாகவும். யானை பயத்தால், அங்கிருந்து இன்று காலையில் வெளியேறி நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பனை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்து அவர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்த்ததாகவும் கைது செய்யப்பட்டவர் தெரிவித்து;ளார்.
சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவினர் மற்றும் மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணையை பொலிசார் முன்னெடுத்துவருகின்றன்.
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






