ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 21 ஆம் திகதி விசேட நினைவு வழிபாடு

An Sri Lanakan soldier stands guard outside St. Anthony’s Shrine in Colombo on April 25, 2019, following a series of bomb blasts targeting churches and luxury hotels on the Easter Sunday in Sri Lanka. – All of Sri Lanka’s Catholic churches have been ordered to stay closed and suspend services until security improves after deadly Easter bombings, which killed at least 359 people and wounded hundreds, a senior priest told AFP on April 25. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இரண்டரை ஆண்டுகள் பூர்த்தியாகுவதை முன்னிட்டு வியாழக்கிழமை (21) உயிரிழந்தவர்களுக்கான விசேட நினைவு வழிபாடுகளை நடத்த கொழும்பு மறைமாவட்ட ஆயர் இல்லம் தீர்மானித்துள்ளது.

மேலும் கொழும்பு பேராயர் மெல்கம் கார்டின் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விசேட நினைவு வழிபாடானது அன்றைய தினம் காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இதனையடுத்து அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு நீர்கொழும்புஇகட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்திலும் விசேட நினைவு வழிபாடுகள் பேராயரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

Leave a Reply