மட்டக்களப்பு, கல்முனை, காத்தான்குடி பிரதான வீதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு லொறி உட்பட ஒரு முச்சக்கர வண்டி, நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்பன சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பிலிருந்து வந்த சிறிய லொறியொன்று காத்தான்குடி வீதியிலுள்ள எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் மோதியுள்ளது.
குறித்த லொறி, முச்சக்கர வண்டியில் மோதுண்டதுள்ளதுடன், அவ்விடத்திலுள்ள மர ஆலையொன்றும் சேதமடைந்துள்ளது.
எனினும், இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டமையுடன், வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.







