ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ள நிலையில்இ இதில் ஒரு தமிழரின் பெயர் கூட இடம்பெறவில்லை.
ஜனாதிபதியினால் நேற்று (26) இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
13 உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவிடம்இ கருத்தாக்கத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் ஒரே நாடுஇ ஒரே சட்டம் மற்றும் சட்ட வரைவை தயாரித்துஇ நீதி அமைச்சினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்து பொருத்தமான திருத்தங்கள் உள்ளதா என தீர்மானித்து பொருத்தமானதாக கருதப்படும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்ககும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மாதத்திற்கு ஒரு முறையாவது ஜனாதிபதியிடம் அறிக்கைகளை சமர்ப்பித்து இறுதி அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் செயலணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
செயலணி உறுப்பினர்கள்
- வண. கலகொடஅத்தே ஞானசார தேரர்.
- பேராசிரியர் தயானந்த பண்டா
- பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க
- பேராசிரியர் சுமேதா சிறிவர்தன
- என்.ஜி. சுஜீவ பண்டிதரத்ன
- இரேஷ் செனவிரத்ன
- சஞ்சய மரம்பே
- எரந்த நவரத்ன
- பானி வெவால
- மௌலவி மொஹமட்
- முகமது இந்திகாப்
- கலீல் ரகுமான்
- அஸீஸ் நிசார்தீன்






