2022ஆம் ஆண்டிற்கான திருப்திகரமான வரவு – செலவுத் திட்டத்தை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் இன்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக சீனா தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.






