விடுதியில் தங்கி நின்று சிகிச்சைபெற்று வந்த 37 வயதுப் பெண்ணை, பார்க்கச் சென்ற இளைஞன் ஒருவர் விஷம் அருந்திய சம்பவம் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் விஷம் அருந்திய நிலையில், உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
எனினும் இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.