இங்கிலாந்தில் உள்ள 800 பாடசாலைகளில் 12-15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி

இங்கிலாந்தில் உள்ள 800 க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பாடசாலைகளில் நாளை 12 முதல் 15 வயதிற்கு இடையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த மாதம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதில் இருந்து இதுவரை 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு முன்பதிவு மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டதில் இருந்து ஒருவாரத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 63 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

12 முதல் 15 வயதுள்ள சிறுவர்களுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என கடந்த மாதம், இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரிகள் பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *