கொரோனா தொடர்பில் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்! – சுகாதாரத்துறை கோரிக்கை

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொது சுகாதார சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களில் 100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், குறித்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் கொரோனா வைரஸ் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது பதிவாகும் கொவிட் – 19 நோயளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை குறைக்க நாம் முன்னர் தேடிச் சென்று செய்ததை போன்று ரெபிட்- என்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்ய வசதிகள் இல்லை.

எனினும், ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள தேவையற்ற ஒன்றுகூடல்கள் தவிர்க்குமாறு, முகக்கவசம் மற்றும் சுகாதார வழிமுறைகள் ஆகியவற்றை முறையாக பின்பற்றுமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *