நாட்டில் தொடர்ந்து கொரோனாத் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று காலை நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் வைத்து இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நிகழ்வின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிடின் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






