ஒரே ஊசியில் பச்சை குத்திய 14 பேருக்கு HIV தொற்று!

உத்தர பிரதேச மாநிலம் நக்மா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் உட்பட 14 பேர் பேருக்கு ஒரே ஊசியைப் பயன்படுத்தி பச்சை குத்தியதில்  எச்ஐவி தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்ட நிலையில்  மலேரியா காய்ச்சல் உட்பட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் எந்த பயனும் இல்லை.  இறுதியில் அவர்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது, அதில் தொற்று இருப்பது அனைவருக்கும் உறுதியானது.

இவர்களில் ஒருவருக்கும் பாலியல் ரீதியிலான தொடர்பிலோ அல்லது தொற்று ஏற்பட்டவரின் ரத்தம் வழியேவோ பாதிப்பு ஏற்படவில்லை.

சமீபத்தில் அவர்கள் அனைவரும் பச்சை குத்தி கொண்டனர் என்பதே அவர்களுக்கு இடையேயான பொதுவான ஒரு விடயம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரிக்கும் போது அவர்களுக்கு பச்சை குத்திய நபர், ஒரே ஊசியை அனைவருக்கும் பயன்படுத்தி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பச்சை குத்தும் ஊசியின் விலை அதிகம் என்பதால், பணத்தை மிச்சப்படுத்த ஒரே ஊசியை பயன்படுத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *