எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு!

நாட்டில் தற்போது மாறிவரும் காலநிலை நிலைமைகளின் கீழ் எலிக்காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதத்திற்குப் பின்னர் இரண்டு மாதங்களுக்கு மிகவும் வறண்ட காலநிலை நிலவுகின்ற போதிலும், நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் எலிக்காய்ச்சல் அபாயம் அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் சமூக சுகாதார வைத்திய நிபுணர் திருமதி துஷானி தம்பரேணு கூறுகிறார்.

மேலும் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பயிரோசிஸ் என்பது எலிகள் மற்றும் கால்நடைகள் மற்றும் எருமைகள் போன்ற விலங்குகளால் பரவும் காய்ச்சல் நோயாகும்.

இந்த நோய் கொறித்துண்ணிகள், பண்ணை விலங்குகள், நாய்கள் மற்றும் பாலூட்டிகளிடமிருந்து கூட பரவுகிறது. இந்த நோய் கிணற்றுக் காய்ச்சல், எலி காய்ச்சல் அல்லது சேற்றுக் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *