மின்சார கட்டணங்கள் திருத்தம் குறித்து நாளை அறிவிப்பு

மின்சார கட்டணங்கள் திருத்தம் குறித்து நாளை செய்வ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

நிதியமைச்சு, மின்சார அமைச்சு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

புதிய கட்டண திருத்தம் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அங்கு விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, பொதுக் கலந்தாய்வுக்கான கட்டணத் திருத்தங்களை முன்னதாக வெளியிட்டது.

அதற்கான ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை கருத்தில் கொண்டு மின்சார கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *