கொழும்பு டொக்யாட் கிளை அலுவலகம் திருகோணமலை துறை முக வளாகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக, துறை முகங்கள் கப்பற் துறை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர கலந்து கொண்டு, கிளையை திறந்து வைத்தார்.
உற்பத்தி துறையின் ஏற்றுமதி இறக்குமதி ஊடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இவ் கிளை அலுவலகம் திருகோணமலை துறை முக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் டொக்யாட் நிறுவனத்தின் தலைவர் டானக மற்றும் இலங்கை துறை முக அதிகார சபையின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






