யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை!

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சற்குணராசா புசாந்தன் யாழ் மாவட்டத்தை தனி ஒருவராக பிரதிநிதித்துவம் செய்தார்.

மூன்று பிரிவுகளில் (330 கிலோ Squat, 175 கிலோ Bench press, 261 கிலோ) நடைபெற்ற மூன்று போட்டியிலும் வென்று மூன்று தங்க பதக்கங்களை வெற்றி கொண்டார்.

இந்த போட்டியில் Deadlift மற்றும் Squat பிரிவில் புதிய சாதனையை நிலைநாட்டிய புசாந்தன், குறித்த போட்டியில் மட்டும் மொத்தமாக 766 கிலோ எடையை தூக்கியும் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *