தேர்தல் ஆணையகத்தை சந்திக்கும் அரசியல் கட்சிகள்!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளன என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் பொருத்தமான சீர்திருத்தங்களை இனங்கண்டு தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்மொழிவுகள் கலந்துரையாடலின் போது எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் சட்டங்களை சீர்திருத்துவதற்கான முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடலும் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *