சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான அறிவிப்பு!

சினோபார்ம் தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்ட நபர்கள் 6 மாதங்கள் கடப்பதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது தொடர்பில் நிபுணர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சினோபார்ம் தடுப்பூசியின் வீரியம் 3 மாதங்களுக்கு பின்னர் குறைவதாக தகவல் கிடைத்துள்ளதாக விசேட வைத்தியர் ரஜீவ் த சில்வா தெரிவித்துள்ளார்.

20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 6 மாதங்களின் பின்னர் மூன்றாவது டோஸ் செலுத்துவது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply