பனை உற்பத்திகளை வெளிநாட்டு ஏற்றுமதி வரை கொண்டு செல்ல வேண்டும் – பனை அபிவிருத்தி சபையின் முகாமையாளர் தெரிவிப்பு!

பனை அபிவிருத்தி சபையின் 44வது நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டது . இன்று காலை 10மணி அளவில் , பனை அபிவிருத்தி சபை அலுவலகத்திலேயே இவ் நிகழ்வானது நடைபெற்றது . இந்த நிகழ்வில், பனை அபிவிருத்தி சபையின் தலைவர் DR. கிஷாந்தன் பத்திராஜ் , பேராசிரியர் . மோகனதாஸ் , பொது முகாமையாளர் . லோகநாதன் , ஆகியோர் கலந்து கொண்டனர் .

பனை மர உற்பத்திகளை , ஏற்றுமதி பொருளாக ஆக்க வழிவகுக்க வேண்டும் . அதற்கு நாம் அயராது பாடு பட வேண்டும் . என பனை அபிவிருத்தி சபை முகாமையாளர் லோகநாதன் தெரிவித்தார் . இந்த நிகழ்வில் வரவேற்பு உரை ஆற்றும் போதே இதை தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த 44 வருடங்களாக இந்த பனை அபிவிருத்தி சபை ஆனது , பல்வேறுபட்ட பணிகளை ஆற்றி வருகின்றது , இன்னும் இது முன்னேறுவதற்கான ஏற்பாடுகளையும் , நடவடிக்கைகளையும் மென் மேலும் முன்னெடுத்து வருகின்றது .

யாழ் மாவட்டத்தின் கற்பக கரு ஆகும் . யாழ்ப்பாண மாவட்டத்தின் , புனித பொருளாகவும் பானையை கருதுகின்றோம். யாழ்ப்பாண மக்கள் இன்னும் பனையின் நன்மைகளை முழுவதுமாய் அடையவில்லை என்றுதான் கூற வேண்டும் .

பனை உற்பத்தியில் இன்னும் இன்னும் தொழில் வாய்ப்புக்களை கூட்டுவதற்கும் , மேலும் வளரவும் வாய்ப்புகள் இன்னமும் இருக்கின்றது .

ஆரம்ப காலங்களில் இந்த செயற்பாட்டை பெரிதளவில் கஸ்ரப்பட்டுத்தான் கட்டி எழுப்பி இந்த நிலையில் வைத்துளார்கள். பனை அபிவிருத்தியில் நிறைய தொழில் வாய்ப்புகள் உள்ளன . இதை சரியான முறையில் நடை முறை படுத்தினால் வெளிநாட்டு ஏற்றுமதி வரை செயற்படலாம் . என கூறினார் .

அதனை தொடர்ந்து , கேக் கட் பண்ணி , 11.30 மணியளவில் இந்த நிகழ்வானது நிறைவு பெற்றது .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *