நாளைய போராட்டத்திற்கு தடை கோரிய பொலிஸார்: கொடுக்க மறுத்து நீதிமன்றம் உத்தரவு

கொழும்பில் நாளை (9) நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கறுவாத்தோட்ட பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நிராகரித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக நீதவான் தெரிவித்தார்.

பல அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *