நாவலப்பிட்டியில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனமான Global Ehsan Relief, அண்மையில் மலையகத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள 600 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளை வழங்கியது.

திருகோணமலை அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜெயவிக்ரம அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்தின் செயலாளர் சமீர நுவன் ரத்நாயக்க, காணி அதிகாரி ஷிரந்த உதயகுமார மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கண்டி அரசாங்க அதிபர் சந்தன தென்னகோன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்களான லலித் எதம்பாவல மற்றும் உத்பலா ஜயரத்ன ஆகியோரினா மேற்பார்வையில் இந்த நிவாரணப் பணிகள் வழங்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *