பொலிஸாரின் கோரிக்கையை நிிராகரித்த நீதிமன்றம்

கொழும்பு, ஓக 8

வெகுஜன அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நாளை (09) கொழும்பு விகார மஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கவுள்ள போராட்டத்துக்கு தடைவிதிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

கறுவாக்கபடு பொலிஸார் விடுத்த கோரிக்கையை நிராகரித்து கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த போராட்டங்களின்போது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அதைக் கையாளும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளது என்றும் நீதவான் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *