
கொழும்பு,ஓக 08
இலங்கையில் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி. (LIOC ) நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல்வேறு பாகங்களில் இப்புதிய எரிபொருள் நிலையங்கள் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே 2016 எரிபொருள் நிலையங்களை நிறுவனம் கொண்டுள்ளது.
இலங்கையின் சீபெட்கோ நிறுவனம் சுமார் 1190 எரிபொருள் நிலையங்களை இயக்குகின்றது.