சிங்கராஜா மழைக்காடுகளை அகற்றி கட்டுமானப்பணிகள்? நீதிமன்றத்தின் அறிவிப்பு

சிங்கராஜா மழைக்காடுகளை அகற்றி நீர்த்தேக்கங்கள் அல்லது வீதிகள் அமைக்கப்படமாட்டாது என வனப் பாதுகாப்பு திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று உறுதியளித்துள்ளது.

சிங்கராஜா வனச்சரகத்தில் உள்ள அரச வன நிலங்களை அகற்றுவது, நீர்த்தேக்கங்கள் மற்றும் வீதிகள் அமைக்கும் பணியை நிறுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையத்தினால் (CEJ) தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு நீதியரசர் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வனப் பாதுகாப்புத் துறை சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச வழக்கறிஞர், வீதிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டுவதற்கு முன்மொழியப்பட்ட எந்தவொரு திட்டத்திற்கும் சிங்கராஜா மழைக்காடுகள் தீண்டப்படாமல் இருக்கும் என நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

இம்மனு எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *