தனிநபரின் மோட்டார் சைக்கிளை வாங்கிச் சென்று எரிபொருள் நிரப்பி கொடுக்கும் யாழ். பொலிஸார்!

சமகாலத்தில் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் அன்றாடம் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். அந்தவகையில் இதுவரை காலமும் பல்வேறு முறைகளில் எரிபொருள் நிரப்பப்பட்டு தற்போது கியூ.ஆர் குறியீட்டு முறை மூலம் எரிபொருள் நிரப்பப்படுகிறது. அதன்படி அத்தியாவசிய சேவையினருக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தனிநபர் ஒருவரது மோட்டார் சைக்கிள் ஒன்றினை பெற்றுச் சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை நிரப்பியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளரிடம் மோட்டார் சைக்கிளை வழங்கிவிட்டு பணத்தினை பெற்றுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து நடைபெறுவதை அவதானித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்ற பொதுமகன் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்ததுடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பின்தொடர்ந்து வந்து, பொலிஸ் நிலையத்தில் வைத்து பணம் கொடுப்பதையும் புகைப்படம் எடுத்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்கு என முன்னுரிமை அளித்து வழங்கப்படும் சந்தர்ப்பங்களை பொலிஸார் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்வது என்பது விசனத்தை ஏற்படுத்துகிறது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *