
கொழும்பு, ஓக 9
சீனாவின் உயர்தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு வந்து தரிக்கும் ஒழுங்கைத் தள்ளிவைக்கும் படி இலங்கை சீனாவைக் கோரியமையை அடுத்து, அது விடயத்தில் இந்தியா மீது கடுமையாகக் காய்ந்திருக்கிறது சீனா.
பாதுகாப்புப் பிரச்சினையைக் காரணம் காட்டி கொழும்பிற்கு புதுடில்லி அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று பெய்ஜிங் நேற்றுக் கண்டித் திருக்கின்றது.
ஓகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த திட்ட மிடப்பட்ட சீன விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆராய்ச்சிக் கப்பலான “யுவான் வாங் 5′ அங்கு வரு வதை ஒத்திவைக்குமாறு பெய்ஜிங்கை இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தச் செய்திகளுக்கு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பதிலளித்த சீன வெளியுறவு அமைச் சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் சீனா இந்த நிலைமைகளைக் கவனத்தில் கொண்டுள்ளது என்றார். “சீனாவுக்கும் இலங்கைக்கும் இடை யிலான ஒத்துழைப்பை இரு நாடுகளும் சுயாதீனமாகத் தெரிவு செய்து பொது வான நலன்களைப் பூர்த்தி செய்து முன்னெடுக்கின்றன. இது எந்த மூன்றாம் தரப் பினரையும் குறிவைக்கவில்லை. பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது” என்று அவர் கூறினார்.
இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அதன் சொந்த வளர்ச்சி நலன்களின் வெளிச்சத்தில் மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க முடியும். சீனாவின் அறிவியல் ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பார்க்கவும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது.
“இலங்கை இந்தியப் பெருங்கடலில் ஒரு போக்குவரத்து மையமாக உள்ளது. சீனா உள்ளிட்ட பல அறிவியல் ஆய்வுக் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் மறுவிநியோகத்திற்காக நிறுத்தப்பட் டுள்ளன. இது வழமை. சீனா எப்போதும் ஆழ்கடல்களில் பயணிப்பதற்கான தனது சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் கடலோர மாநிலங்களின் அதிகார வரம்புப் பிரதே சங்களில் அவர்களின் கடல்களுக்குள் அறிவியல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு முழுமையாக மதிப்பளிக்கிறது” என்று அவர் கூறினார்.
உயர்தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலை அம்பாந்தோட்டையில் நிறுத்துவது அதன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என இந்தியா இலங்கைக்கு தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கப்பல் செயற்கைக்கோள்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்டதாக கூறப்பட்டதால், இந்தியாவி டம் இருந்து இலங்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் பொரு ளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத் தும் எந்தவொரு வளர்ச்சியையும் கவன மாகக் கண்காணிப்பதாகக் கூறியுள்ளது.