விஹார மகாதேவி பூங்காவில் இன்று அரசுக்கு எதிரான போராட்டம்

கொழும்பு, ஓக 9

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களால் இன்று  ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரிய கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது.

அத்துடன், போராட்டத்தின் போது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டாலோ அல்லது சொத்து சேதம் ஏற்பட்டாலோ, அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என தலைமை நீதவான் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply