வாகனங்களில் இருந்து எரிபொருளை எடுத்தால் QR முறை இரத்து!

வாகனங்களில் இருந்து எரிபொருனை எடுக்கும் நபர்களின் தேசிய உரிமம் (qr) ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஓட்டோக்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

எதிர்வரும் சில தினங்களில் பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளை அடையாளம் காணும் முறைமையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி சங்கங்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *