காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வேரப்பட்டி கிராம சேவகர் பிரிவில் தொல்பொருள் சின்னம் இருப்பதாக தெரிவித்து, அதனை பார்வையிடுவதற்காக தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுல விக்ரமநாயக்க அவர்கள் இன்று அவ்விடத்திற்கு வருகைதரவுள்ளார்.
இந்நிலையில், அப்பகுதியில் இராஜாங்க அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பலர் ஒன்றுகூடி இருந்தனர்.
அத்துடன் பெருமளவிலான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
காணியைப் பிடித்து விகாரை அமைப்பதற்காக குறித்த அமைச்சரும் ஏனையோரும் வருவதாக தெரிவித்த மக்கள் அவ்விடத்தில் ஒன்றுகூடினர். அதனால் அவ்விடத்தில் தற்போது பதற்றம் நிலவுகிறது.








