மழையின் போது மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்டிருந்த மலையகப் பாதையில் இயங்கும் ரயில் இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இரவு நேரங்களில் தபால் புகையிரதம் இயங்காது என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு காரணமாக நாவலப்பிட்டியில் இருந்து நானுவோ வரையிலான ரயில் போக்குவரத்து கடந்த 2ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்