
சீனாவின் மிகப்பெரிய எரிபொருள் நிறுவனமான சினோபெக், எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களை விற்பதற்காக இலங்கையின் சந்தையில் நுழைய வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து அதிகமான நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் தொடங்குவதற்கும் அனுமதியளிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது.
தற்போது, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் 90 வீதமானமை அரசுக்கு சொந்தமான இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும், எஞ்சிய 10 வீதமானது லங்கா ஐ.ஓ.சி மூலமாகவும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே மேற்படி சீன நிறுவனம் இலங்கைக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.