லாஃப் எரிவாயு பாவனையாளருக்கு மகிழ்ச்சித் தகவல்

சமையல் எரிவாயுக்கான திருத்தப்பட்ட விலை சூத்திரத்துக்கமைய மாதாந்தம் 5 ஆம் திகதி சமையல் எரிவாயு விலையில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், லாஃப் நிறுவனமும் விலை குறைப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பில் அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

‘லாஃப் சமையல் எரிவாயு நிறுவனத்தினால் எதிர்வரும் நாட்களில் விலை குறைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கமைய லாஃப் சமையல் எரிவாயுவின் விலை மற்றும் அதன் விநியோகம் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அறிவிக்கப்படும்’ என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *