
கொழும்பு,ஓக 07
நாட்டில் மேலும் 6 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்றைய தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
4 ஆண்களினதும், 2 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளன.
30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஒருவரும், 60 வயதிற்கு மேற்பட்ட ஐவரும் கொவிட் தொற்றால் மரணித்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.