
கொழும்பு,ஓக 09
ஜனாதிபதியின் நாட்டிற்கான உரையின் போது பிரதான ஒருவிடயத்தினை மறந்து உரையாற்றியதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்பூர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஊழலை இல்லாதொழிப்பதாக தொடர்ச்சியாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசத்திற்கான உரையில் ஏன் அதனை உள்ளடக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் .
சமூகத்தில் மக்கள் பிரதிநிதிகள் மீது அதிகம் வெறுப்பு ஏற்பட்டமைக்கு ஊழலே காரணம் என்பதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏன் இதுவரை உணர்ந்து செயற்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்பூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.