ஏறாவூர்பற்று மற்றும் மண்முனை மேற்கு பிரிவிற்குரிய 20 அணிகள் பங்குபற்றிய கன்னங்குடா உதய தாரகை விளையாட்டு கழகம் நடத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டியில் செங்கலடி பதுளை வீதி இராஜபுரம் யுகம்புரி விளையாட்டு கழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
தொடர்பில் இரண்டாம் இடத்தை பெற்ற இராஜபுரம் யுகம்புரி விளையாட்டு கழகத்தின் தலைவர் முத்துராஜ சஞ்சீவன் வெற்றிக்கிண்ணத்தையும் பரிசுத்தொகையையும் அதிதிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் அணி வீரர்கள் அருகில் நிற்பதையும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதினை யுகம்புரி விளையாட்டு கழகத்தின் வீரர் செல்வகுமார் விதுர்ஸ் பெற்றுக்கொள்வதையும் இங்கு காணலாம்.

பிற செய்திகள்