
கொழும்பு,ஓக 09
தற்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக செக் குடியரசின் ஜனாதிபதி மைலோஸ் சீமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமிக்க தலைவரான ஜனாதிபதி சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
செக் குடியரசும் இலங்கையும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் நெருங்கிய நட்பை அனுபவித்து வருகின்றன.
அந்த சிறப்பான நல்லுறவை இரு நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் ஆழமாக மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் செக் குடியரசின் ஜனாதிபதி மைலோஸ் சீமன் தெரிவித்துள்ளார்.