காலிமுகத்திடல் போராட்டம் இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். இந்த போராட்டத்தை குறை மதிப்புக்குள்ளாகின்ற விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஆகவே உடனடியாக அவசர கால சட்டத்தை நீக்க வேண்டும். இதன் மூலம் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களது உள்ளங்களை புரிந்து கொள்ளும் விதமாக செயற்பட வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.
யாழில் இன்று இடம்பெற்ற ஜே.வி.பி மத்திய குழு தலைவர்களின் ஊடக சந்திப்பின் போது தோழர் சுகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
ஆரம்பத்தில், இது ஜனநாயக ரீதியான போராட்டம், மக்களது எழுச்சி என்று கூறப்பட வேளையில், இன்று ஒரு வகையான கும்பல் என்று கூறும் நிலவரத்தை ஆளும்கட்சி தோற்றிவித்துள்ளது.
120 நாட்களுக்கு மேலாக மக்கள் காலிமுகத்திடலிலும், நாடு பூராகவும் அபிலாசைகளை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர்.
மக்களுடைய உரிமை காலிமுகத்திடல் போராட்டத்துக்குள்ளளே அதிகாரத்துக்கு வந்த சக்திகள் உடனடியாகவே அவர்களை அப்புறப்படுத்துகின்ற நடவடிக்கைகள் காட்டுமிராண்டி தனமானவை.
சாதாரண மக்களது வாக்குகளில் அதிகாரத்துக்கு வந்தவர்கள், தமது இடங்களுக்குள் மக்கள் போராட்டங்களை மேற்கொள்ளுகின்ற போது அதிர்ச்சி அடைகின்றனர்.
வீதிகளில் போராடுகின்ற மக்களால், வரலாறு எழுதப்படுகின்றது. அறம் நிலைநாட்டப்படுகின்றது.
எமது நாட்டில் துரதிஸ்டம் என்னவென்றால், மலையக தமிழர்களது பிராயவுரிமை, வாக்குரிமை வழங்குவதில் 50, 60 வருடங்களாக இழுபறிகள் நடைபெறுகின்றது. இத்தகைய இழுபறிகளுக்கு மத்தியில்தான் இன்று அவர்களுக்கு பிரயாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
விசேட அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக எந்தவொரு முடிவும் இல்லை, அதேபோல 13ஆவது திருத்த சட்டம், அவசரகால சட்டம், பயங்கரவாத தடைசட்டம் போன்றன இன்றும் நீடிக்கின்றது.
இலங்கையில் உள்ள குறைபாடு என்னவென்றால் சரியான நிலவரங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில்லை. சமூக பொருளாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக உள்ளது.
மேலும் , முக்கியமாக காலிமுகத்திடல் போராட்டத்தில் மூலம் அரங்கிற்கு கொண்டு வரப்பட்ட விடயங்கள் பின்வருமாறு:
யாழ்ப்பாண நூல் நிலைய எரிப்பு, முள்ளிவாய்க்கால் நினைவுகள், 1983 இன கலவரம், படுகொலைகள், சமூக ஒற்றுமை போன்ற பல்வேறு விடயங்கள் முன்வைத்து இவ்வாறான போராட்டத்தை இழிவுபடுத்துகின்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மேலும் இலவச கல்வி, இலவச வைத்தியம், இலவச சமுர்த்தி பாதுகாக்கப்பட வேண்டும்.
இராஜதந்திர உறவு பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயம், மீனவர்களது நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இன ஒற்றுமை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஆகவே உடனடியாக அவசர கால சட்டத்தை நீக்க வேண்டும். இதன் மூலம் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களது உள்ளங்களை புரிந்து கொள்ளும் விதமாக செயற்பட வேண்டும்.
தேர்தலுக்கு விரைவாக செல்ல வேண்டும். அதிகார அரசியல் கலாசாரம் நீக்கப்பட வேண்டும். இன சமூகங்களது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். என்று கூறினார்.
பிற செய்திகள்