குறித்த பகுதியில் 119 அவசர சேவைக்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பொலிஸார் சடலம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
எனினும் மேற்படி சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் 35 இற்கும் 40 இற்கும் இடைப்பட்ட வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 அடி 6 அங்குலம் உயமுடைய குறித்த சடலத்தின் இரண்டு கைகளிலும் பச்சை எனும் அடையாளம் குத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனை மற்றும் நீதிவான் விசாரணைகளுக்காக மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தொடுவா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்