தமிதா உட்பட 8 பேருக்கு பிணை!

வெகுஜன அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த கண்டன ஊர்வலம் இன்று கொழும்பில் நடைபெற்றது.

விகாரமஹாதேவி பூங்காவில் இருந்து ஆரம்பமான பேரணி கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அடைந்ததுடன், அங்கு பகிரங்க அறிக்கையொன்றையும் முன்வைத்தனர்.

அதே நேரத்தில், தீவின் பல பகுதிகளில் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மேலும், சமகி ஜனபலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இலங்கை வங்கி ஊழியர் சங்கமும் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரபல நடிகை தமிதா அபேரத்ன உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை விடுவிக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *