தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு , திருகோணமலை – அக்போபுர சந்தியில் இன்று செவ்வாய்கிழமை (09) மாலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மீனவர்களின் வாழ்வு அனர்த்தத்தில் ,முறையற்ற கைதுகளையும் கடத்தல்களையும் நிறுத்து ,அவசரகாலச் சட்டத்தை ரத்துச் செய், பாராளுமன்றத்தை களை, மீன்பிடி படகுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கு , மக்களுக்கு இடமளி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.
அகில இலங்கை பொது மீனவர் சங்கம் ,ஒன்றிணைந்த மக்கள் இயக்கம், தொழில் சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் உள்ளிட்ட தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து இணைந்து இவ்வார்ப்பாட்டத்தை ஏற்படு செய்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி, கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதில் தொழில் சங்கத்தினர், பொதுமக்கள் என பலதரப்பினரும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .






பிற செய்திகள்